Sunday 30 June 2013

டாப்... டாப்... டாப்ளர்! Doppler Shift in Tamil

tamilnadu science and tech page 
நம் வண்டியின் ஸ்பீடோ மீட்டரைப் பார்க்காமலேயே டிராபிக் போலீசார் ஓவர் ஸ்பீடு என்று அபராதம் கட்டச் சொல்வது எப்படி? நாம் போகும் வேகத்தை தூரத்திலிருந்தே அவர்கள் எப்படிக் கணிக்கின்றனர்? இந்த இடத்தில்தான் டாப்ளர் எஃபெக்ட் என்ற ஒப்பற்ற அறிவியல் அடிப்படை உதவுகிறது. அந்த அடிப்படையை ஆராய்ந்து உலகுக்குத் தந்தவர் ஆஸ்திரிய அறிவியல் மேதை கிறிஸ்டியன் டாப்ளர் (Christian Andreas Doppler). ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் நகரில் 1803ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி பிறந்தவர் டாப்ளர். இவர் தந்தை, கல் உடைக்கும் தொழிலாளி. இளவயதில் நோஞ்சான் குழந்தையாக இருந்ததால், தந்தையின் தொழிலிலி ருந்து தப்பித்தார் டாப்ளர். பள்ளிக் கல்வியை முடித்து, வியன்னாவிலும் சால்ஸ்பர்கிலும் வானியல் மற்றும் கணிதத்தைக் கற்றுத் தேர்ந்தார். பின் பிராகா பல்தொழில்நுட்பக் கல்லூரியில் பணியாற்றினார். 

அமெரிக்க விஞ்ஞானிகளின் குளோனிங் ஆராய்ச்சி வெற்றி - SHOCKING NEWS

தோல் செல்லில் இருந்து ஸ்டெம்செல் கரு முட்டை உருவாக்கம் : மனிதனை ஜெராக்ஸ் எடுக்கும் பகீர் முயற்சியா?


போர்ட்லேண்ட்: மனிதனின் தோல் செல்லுடன் பெண்ணின் சினைமுட்டையை சேர்த்து ஸ்டெம்செல் கருமுட்டையை உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானிகள் அபார சாதனை படைத்துள்ளனர். இதன்மூலம் சிக்கலான ஆபரேஷன்களுக்கு தேவையான ஸ்டெம்செல்களை உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறினர். குளோனிங் முறையில் மனிதனை ஜெராக்ஸ் எடுக்கும் முயற்சியின் முதல்கட்டம் இது என்ற பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது இந்த ஆராய்ச்சி. மனித உடலில் பல லட்சம் கோடி செல்கள் உள்ளன. இவற்றையோ, நுண்ணுயிர்களையோ மணம், நிறம், குணம் மாறாமல் அச்சு அசலாக ஜெராக்ஸ் பிரதி எடுப்பதுதான் ‘குளோனிங்’. இரு வரி விளக்கம் என்றாலும் இது மிகவும் சிக்கலானது. இதுதொடர்பான

ஸ்பெயின் ஆராய்ச்சியாளர்கள் பகீர் தகவல் : எல்.இ.டி விளக்குகளால் கண் பார்வை பறிபோகும்

மேட்ரிட்: எல்இடி விளக்குகளால் மனிதர்களின் கண் பார்வைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விலை குறைவான குண்டு பல்புகளைத்தான் மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். ஆனால், இவை வெப்பத்தை அதிகளவில் உமிழ்வதாகவும், மின்சாரத்தை அதிகளவில் உறிஞ்சுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு மாற்றாக எல்இடி எனப்படும், ‘லைட் எமிட்டிங் டையோடு’ விளக்குகள் அறிமுகம் ஆனது. இவை குண்டு பல்புகள் பயன்படுத்தும் மின்சாரத்தில் 5ல் ஒரு பகுதியை மட்டுமே பயன்படுத்துவதாகவும், சுற்றுச்சூழலுக்கு மிக சிறப்பானது என்றும் கூறப்பட்டது. இதனால், ஐரோப்பிய யூனியனில் பல ஆண்டுகளுக்கு முன்பே குண்டு பல்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது. 

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள 6 கோள்களில் 3 கோள்கள் மனிதன் வாழ்வதற்கு ஏற்றதா ?

விண்வெளி ஆய்வாளர்கள் வானியல் நீள்வட்டப்பாதையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள 6 கோள்களில் 3 கோள்கள் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை கொண்டதாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த 3 கோள்களுக்கும் Gliese 667C என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இங்கு நீரும் போதிய அளவு இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த 3 கோள்களும் பூமியை விட அளவில் பெரியதாகவும், நெப்டியூனை விட சிறியதாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே பகுதியில் 3 கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை என வாஷிங்டன் விண்வெளி ஆய்வுமைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நட்சத்திர scorpious  (தேள்) என்

விரைவில் வருது சோலார் பெயின்ட் - SOLAR PAINT

விரைவில் வருது சோலார் பெயின்ட் : சுண்ணாம்பு போல சுவரில் அடிக்கலாம் வீட்டுக்கு வீடு மின்உற்பத்தி நடக்கும்

நியூயார்க்-: சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல்களை திரவ வடிவில் உருவாக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. தரையிலும் சுவரிலும் சோலார் பேனல் பெயின்டை அடித்தால் வீட்டுக்கு வீடு, தரைக்கு தரை, சுவருக்கு சுவர் மின்உற்பத்தி நடக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். உலகம் முழுவதும் சோலார் மின் உற்பத்தி திட்டங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அனல், நீர்மின் திட்டங்களில் மின்உற்பத்தி குறையும் பகுதிகளில் சோலார் மின் உற்பத்தியில் அரசுகள் கவனம் செலுத்தி வருகின்றன. மக்களும் அரசுகளும் இதில் சற்று தயக்கம் காட்டுவதற்கு காரணம்.. சோலார் பேனல்கள் அமைப்பதற்கு ஆகும் அதிகப்படியான செலவு.

Friday 28 June 2013

TET ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற என்ன செய்ய வேண்டும்? - HOW TO CRACK TAMILNADU TET EXAMS ?

TAMILNADU TET ANSWER KEYS DISCUSSION 2013
இந்த மாதம் வருகிறது... அடுத்த மாதம் வருகிறது... நாளை வருகிறது என்று சொல்லிக் கொண்டு இருந்த ஆசிரியர் தகுதித்தேர்வு நமக்கு மிக அருகில் வந்து அமர்ந்துவிட்டது. அதாவது ஆகஸ்ட் 17,18 தேதிகளில். இந்த நேரத்தில் நாம் என்ன செய்யலாம்? இதோ சிந்தனைக்கு சில...
*  பயிற்சி நிலையங்களில் மீது வைக்கின்ற நம்பிக்கையை முதலில் உங்கள் மீது வைக்க வேண்டும்.
*  மனம் மற்றும் உடல் இரண்டையும் தேர்வுக்குத் தயாராக்க வேண்டும்.


*  சுய சிந்தனையுடையவராய் உங்களை நீங்கள் நினைக்க வேண்டும்

அகத்தின் நோய்கள் நகத்தில் தெரியும்..


லேசான சிவப்பு நிறத்தில், சற்று பளபளப்பாக இருக்கும் கைவிரல் நகங்களில் ஒரு சிறு வளர்பிறை வடிவம் இருந்தால் உடலில் நல்ல ரத்த ஓட்டத்தைக் குறிக்கும்.

நகங்களில் சொத்தை விழுந்து கறுத்து காணப்பட்டால் உடலுக்கு போதிய ஊட்டச் சத்துகள் கிடைக்கவில்லை என்று பொருள்.
...
நகங்கள் மிகவும் சிவந்து காணப்பட்டால், உடலின் ரத்த அளவு அதிகம் என்பதைக் காட்டுகிறது.

விரல் நகங்கள் சற்றே நீல நிறமாக இருந்தால் இதயம் பலவீனமாக இருப்பதாக அர்த்தம்.

Thursday 27 June 2013

உலக விஞ்ஞானிகளை வியக்க வைத்த, ஒன்பது எழுத்துக்களில் தமிழன் கணிக்கும் பஞ்சாங்கம்;

பல பிரம்மாண்டமான நவீன கருவிகளைக் கொண்டு கணிணியின் துணையுடன் துல்லியமாகக் கணிக்கப்படும் கிரகணங்களைத் தமிழர்களின் பஞ்சாங்கம் அந்தக் கருவிகளின் துணை இன்றி வினாடி சுத்தமாகக் கணித்துப் பல நூறு ஆண்டுகளாகச் சொல்லி வருகிறது என்றால் அதிசயமாக இல்லை? இதை எப்படித் துல்லியமாக தமிழர்களால் கணிக்க முடிகிறது என்று உலகெங்கிலும் உள்ள வானியல் விஞ்ஞானிகளே ஆச்சரியப்படுகின்றனர்! உலகமே வியக்கும் பஞ்சாங்கம் தமிழனின் அபூர்வ வானியல், கணித, ஜோதிட அறிவைத் தெள்ளென விளக்கும் ஒரு அபூர்வ கலை! இப்படிப்பட்ட பஞ்சாங்கம் நம்மிடம் இருப்பதை எண்ணிப் பெருமைப்படாமல் அதை இகழும் பகுத்தறிவாளர்களை தமிழர்கள் என்று எப்படிக் கூற முடியும்? இதை நாம் ‘பேடண்ட்’ எடுக்காவிட்டால் மஞ்சளைத் துணிந்து பேடண்ட் எடுக்க முயன்றது போல் இதையும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தனதுடைமையாக்கிக் கொள்ளும்! 

தமிழர்களின் பஞ்சாங்கக் கணிப்பு அதிசயமான ஒன்று! அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ ஆகிய ஒன்பது எழுத்துக்களை வைத்துக் கொண்டே பஞ்சாங்கத்தைத் தமிழர்கள் கணித்து விடுவது

Wednesday 26 June 2013

kavignar kannadasan வாழ்க்கை வரலாறு

செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் 14 வயதுப் பையனாகச் சென்னை வந்தார் கவிஞர். அன்று இரவு படுக்க இட
மின்றி மெரினா பீச்சில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டிருக்கிறார் கவிஞர்.

நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. காலையில் நகரத்தார் விடுதிக்குப் போக வேண்டும். இரவு மண்ணடி வரை நடந்து போக முடியாது. அதனால் பீச்சில் படுத்துக் கொள்ள அனுமதிகேட்ட அந்தப் பதினாறு வயதுப் பையனின் கோரிக்கையைப் போலீஸ் நிராகரித்தது. ""படு...படுக்கணும்னா நாலணா கொடு'' என்று காவல் மிரட்டியது. நாலணாவுக்கு வழியின்றி கலங்கிய கண்களுடன் காந்தி சிலையிலிருந்து நடந்திருக்கிறார் கவிஞர்.

சில பயனுள்ள இனையத்தளங்கள்! , Important Websites

சான்றிதழ்கள்

1) பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta

2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta

3) வில்லங்க சான்றிதழ்
http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0

4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/birth.pdf

http://www.tn.gov.in/appforms/death.pdf

5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-community.pdf

6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-income.pdf

C. E-டிக்கெட் முன் பதிவு

1) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு
http://tnstc.ticketcounters.in/TNSTCOnline/

http://www.irctc.co.in/

Saturday 22 June 2013

AADHAR Card Online Registration and Applications Download

AADHAR Card is must to get LPG Subsidy - "ஆதார்' அட்டை வாங்காவிட்டால் சமையல் எரிவாயு விலை ரூ.891.50 -
ஆதார் அட்டை இல்லையெனில் உங்களின் கேஸ் 891.50.

 ஆதார் அட்டை இருந்தால் இதில் ரூபாய் 511 அரசாங்கம் உங்கள் வங்கி கணக்கில் செலுத்தும். இது அக்டோபர் மாதத்திற்க்குள் கார்டு வாங்க வேண்டும். கார்டு இலவசம். கார்டு அப்ளை பண்ணும் போது உங்களுடைய வங்கி கணக்கை மறக்காமல் சேர்த்து விடுங்கள் அது போக இந்த கார்டு எங்கெல்லாம் பதியலாம் என்று இங்கு பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்......... ஓராண்டிற்கு மானிய விலையில், 9 சமையல் எரிவாயு உருளைகளை வழங்குகிறது. அமெரிக்காவுல இருந்துகிட்டு உங்களுக்கு எப்ப்டி ஆதார் கார்டுன்னு கேட்டா என்கிட்ட பதில் இல்லை....ஹிஹிஹி Link -http://uidai.gov.in/aadhaar-enrolments.html

பாஸ்போர்ட்டு அப்ளே செய்யப்போரிங்களா ? அப்ப இத படிங்க !! pass port online registration and apply


அடிக்கடி பாஸ்போர்ட் ஆபீஸ் போயி போயி பாஸ்போர்டிற்கு அப்ளை செய்துள்ளதால் ஓரளவிற்கு என்ன என்ன தேவைபடும், தேவைபடாது என்று தெரிந்து விட்டது, நம்மளுக்கு தெரிந்ததை நாலு பேருக்கு பகிரலாமே என்ற நல்லெண்ணத்தில்

ஒகே ரெடி ஸ்டார்ட்.
முதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள் https://passport.gov.in/pms/Information.jsp

Continue என்பதை கிளிக் செய்தவுடன் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும்.
அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும்.
District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்Service Desired:என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா)
Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன
பெண் கணவனின் பெயர்)
First Name: உங்களது பெயர்
உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் "if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full" என்பதை கிளிக் செய்து
Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்
Sex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்
Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)
Place of Birth: பிறந்த ஊர்

சர்க்கரை நோயை தடுக்கும் அத்திபழம்


அனைவரும் விரும்பும் அத்திப்பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. வைட்டமின் ஏ, இ சத்துக்கள் நிறைந்துள்ள அத்திப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. சர்க்கரை நோயை தடுக்கும் சக்தி அத்தி இலைகளுக்கு உண்டு. சர்க்கரை நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பழத்தில் பொட்டாசியம், கால்சியம், மினரல் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளன.

அத்திபழத்தில் இரும்புச்சத்து ஒரு கிராம் அளவு உள்ளது. கால்சியம், மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களும் நிறைந்து உள்ளதால், எலும்பு வளர்ச்சிக்கும், பலத்திற்கும் உதவுகிறது. இளம் பெண்கள் முதற்கொண்டு மாதவிடாய் காலம் முடிவுறும் நிலையில் உள்ள பெண்கள் வரை தினம் அத்திப்பழத்தை இரவு நீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் நீரை குடித்து பழத்தை மென்று சாப்பிட மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.

Friday 21 June 2013

விண்டோஸில் மறைந்திருக்கும் சிஸ்டம் டுல்ஸ் | Windows Hiding System Tools

நீங்கள் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 அல்லது முந்தைய விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் பயன்படுத்தினாலும், நீங்கள் பயன்படுத்தும் சிஸ்டத்தில், பயன் தரத்தக்க டூல்ஸ் பல மறைத்து வைக்கப்பட்டிருப்பதனை அறியாமல், சிஸ்டத்தினைப் பயன்படுத்தி வருவீர்கள். சில டூல்ஸ் ஸ்டார்ட் மெனுவில், எளிதாகக் காண இயலாத வகையில் இருக்கலாம். சிலவற்றை ஒரு கட்டளை கொடுத்து அணுகிப் பெறலாம். 
இவற்றில் பல டூல்ஸ்களை, அவற்றின் பெயர் தெரிந்தாலே, அவற்றைக் கொண்டு இயக்கலாம். டூல்ஸ் புரோகிராமின் பெயரைத் தேடி அறிந்து, அதனை டைப் செய்து, என்டர் தட்டினால், உடன் அந்த டூல்ஸ் நம் பயன்பாட்டிற்கு வந்து நிற்கும். விண்டோஸ் 8 சிஸ்டத்தில், சர்ச் ஸ்கிரீனில், முதலில் Settings வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கும். இவற்றில் சில பயனுள்ள டூல்ஸ்களைப் பார்க்கலாம்.

Thiruvalluvar University Recruitment 2013 – JRF Vacancies 2013 June Updates

Thiruvalluvar University – JRF Vacancies:

 Thiruvalluvar University has issued notification for the recruitment of Junior Research Fellow (JRF) position in the Department of Atomic Energy (DAE-BRNS) funded project entitled “Solar energy conversion into electricity using blended polymer electrolytes for nanocrystalline dye-sensitized solar cells”. Eligible candidates may submit the application on or before 01-07-2013. More details regarding educational qualification, age limit, selection process and application process are mentioned below…

Thiruvalluvar University Vacancy Details

Total No of Posts: 01 

Name of the Post: Junior Research Fellow

Monday 10 June 2013

TamilNadu Employment News 2013 June Updates | வேலைவாய்ப்பு செய்திகள் (10-06-2013)

வேலைவாய்ப்பு செய்திகள் (10-06-2013)



வேலைவாய்ப்பு செய்திகள் (10-06-2013),TamilNadu Employment News 2013 June Updates, TamilNadu Employment News, DAILY THANTHI  VELAIVAIPPU NEWS COLLECTIONS, DAILY THANTHI  VELAIVAIPPU NEWS COLLECTIONS 2013, daily thanthi general knowledge 2013, DAILY THANTHI ARINTHU KOLLUNGAL LATEST UPDATES 2012, DAILY THANTHI ARINTHU KOLLUNGAL LATEST UPDATES, daily thanthi jobs 2014, DAILY THANTHI  VELAIVAIPPU NEWS COLLECTIONS 2013, daily thanthi general knowledge 2013, 2013 news for jobs, tn jobs in chennai 2013, 

Saturday 8 June 2013

மருதுபாண்டியரின் போர்ப் படைத் தளபதிகள் பற்றிய வரலாற்று தகவல் maruthu pandiyar story


மருதுபாண்டியரின் போர்ப் படைத் தளபதிகள் பற்றிய வரலாற்று தகவல்..!

சிவகங்கை சீமையின் திருப்பத்தூர் கோட்டை வாயில். சுற்றிலும் மக்கள் வெள்ளம். ஒவ்வொருவர் முகத்திலும் ஆறாத் துயரம். ஒருவர் இருவர் அல்ல. ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ்ப் போராளிகளை தூக்கிலிட்டுக் கொண்டிருக்கிறார்கள் வெள்ளையர்கள்.

முதலில் அஞ்சாநெஞ்சன் சின்னமருது. மக்கள் இதயம் துடிதுடித்தது. அடுத்தது சின்ன மருதுவின் மூத்தமகன், உற்றார் உறவினர், போர் வீரர்கள், கடைசியாக பெரிய மருது. இப்படி மருதுபாண்டியர்வம்சத்தையே கூண்டோடு தூக்கிலிட்டனர்.அழுவதைத் தவிர அந்த மக்களுக்கு எதுவும் செய்யமுடியாத நிலை.

கடைசியாக சின்ன மருதுவின் இளையமகன் துரைச்சாமி. பதினைந்து வயது பாலகன். வயதைக் காரணம் காட்டி அவனைத் தூக்கிலிடவில்லை. ஆனால் அவன் உடல் முழுதும் சங்கிலியால் பிணைத்திருந்தனர். கால்களில் இரும்பு குண்டை கட்டிவிட்டிருந்தனர். தந்தை, பெரியப்பா, சகோதரன், பங்காளிகள் தூக்கில் தொங்கும் காட்சியைக் காணவைத்தது கொடுமை.

Friday 7 June 2013

லாரிகளுக்கு புதிய அலுமினிய டிஸ்க் : டீசல் சிக்கனத்தால் லாபம்

கடந்த சில ஆண்டுகளாக வாகன உதிரிபாக விலை உயர்வு, டீசல் விலை உயர்வு என பல சிக்கல்களை சந்தித்து வந்த போக்குவரத்து தொழிலில், அதிக பாதிப்புகளை கண்டவர்களில் லாரி உரிமையாளர்களும் உண்டு. இப்போது அவர்களுக்கு, வரப்பிரசாதமாக வந்துள்ளது, புதிய அலுமினிய டிஸ்குகள். லாரி சக்கரங்களில் பயன்படுத்தப்படும் இந்த டிஸ்குகள், லாரி தொழிலை எப்படி பாதிக்கின்றன.., அதோடு, இவற்றால் என்ன லாபம் என்பது உள்ளிட்ட விரிவான தகவல்களை பார்க்கலாம்.
செலவு கூடியதால், நசிவில் லாரி தொழில்:

Monday 3 June 2013

Aayakalai 64 in Tamil - ஆய கலைகள் அறுபத்து நான்கு

ஆய கலைகள் அறுபத்து நான்கு ! அன்று தமிழன் வாழ்ந்து காட்டி விட்டுச் சென்ற வாழ்கையைத் தான் , அறிவியல் கண்டுபிடிப்புகள் என இன்றைக்கு தினமும் ஒன்றாய் விஞ்ஞானம் தந்து கொண்டு உள்ளது ! இன்றைக்கு நாம் இந்த அறுபத்து நான்கையும் கற்க முடியாது என்றாலும், இதன் பெயரும் அது எதற்காக பயன்பட்டது என்பதையாவது தெரிந்து கொள்வோமே !