Sunday 12 May 2013

தமிழர் வரலாறு கடலுக்கடியில் பூம்புகார்






இந்த அரிய தகவலை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் ,
தமிழர் பெருமையை உலகம் அறிய செய்வோம் !!

கடலுக்கடியில் பூம்புகார்..

கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும்அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல்கொந்தளிப்பில் இந்த நகரங்கள் மூழ்கின.பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பாமொகஞ்சதரோ நாகரிகங்களை விடப்பழமையானவை ஆகும்கண்காட்சியில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பூம்புகார்காம்பே நகரங்கள் பற்றிய 

வீடியோகாட்சிகள் காண்பிக்கப்பட்டதுகடலுக்கடியில் சென்று எடுக்கப்பட்ட முக்கியமான வீடியோ படங்கள் அவைஇந்தியநிலவியல் விஞ்ஞானிகள் மீனவர்கள் உதவியுடன் எடுக்கப்பட்டதுகடலுக்கடியில் நகரங்களின் சுவடுகள் ஆங்காங்கேஉள்ளதுஏறக்குறைய பூம்புகார்காம்பே நகரங்கள் ஒரே காலத்தவைஇரண்டும் ஒரே காலத்தில் தான் கடலில் மூழ்கிஇருக்க வேண்டும் என்று கிரகாம் குக் கருதுகிறார்.

வீடியோ படத்தில் மண் கல்லான கருவிகள்மனித எலும்புகள்வீட்டுச் சுவர்கள்பாத்திரங்கள்ஆபரணங்கள்வீட்டுமுற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றனபூம்புகார் அருகே மூழ்கிய நகரம் பற்றி எடுக்கப்பட்ட வீடியோ படத்தில் பெரியகுதிரை வடிவ பொம்மைகள் காணப்படுகின்றனஇதைப் பற்றி அறிய வந்ததும் விஞ்ஞானிகள் வியப்பில் மூழ்கிப்போயுள்ளனர்இதைப் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்தால் கூடுதல் விவரங்கள் கிடைக்கலாம் என்று விஞ்ஞானிகள்கூறுகின்றனர்

இதை படித்தவர்கள் என்ன செய்தீர்கள்கிரகாம் குக் பற்றி நமது மேடைகளில் பள்ளி வகுப்புகளில் நீங்கள் பேசினீர்களா?அறிவியல் அடிப்படையில் பூம்புகார் 9500 ஆண்டு பழமை வாய்ந்தது என்று மெய்ப்பிக்கப்பட்ட பின்னராவது ஈராயிரம்ஆண்டுக ள் ஈராயிரம் ஆண்டுகள் என அடிக்கடி நமது பழமை பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டு பத்தாயிரமாண்டு நாகரிகம்படைத்தவர்கள் என்று பேசத் துவங்கினீர்களா?
உங்கள் மூளை ஈராயிரமாண்டுகள் வரை மட்டுமே சிந்திக்கமாஉறைந்து போய் விட்டதாபுதிய உண்மைமெய்பிக்கப்பட்டவுடன் நமது பாட நூற்களில் எற்றப்பட்டிருக்க வேண்டாமாகாம்பே நகரம் கண்டுபிடிக்கவுடன்இந்தியாடுடே அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டதுபூம்புகார் பற்றிய உண்மைகள் வெளிவந்ததும் ஊடகங்கள் அதைப்பெரிதாக வெளியிடவில்லைதமிழினம் பற்றிய அக்கறையுள்ள தொலைக்காட்சிகளுமில்லை.

தமிழறிஞர்கள் நடத்தும் சிற்றிதழ்களாவது பதிவு செய்ய வேண்டாமாபூம்புகார் பற்றி மேலும் ஆய்வு தேவை என்றுதமிழறிஞர்கள் குரல் எழுப்பியதுண்டாசென்னையில் உள்ள தேசிய கடற்பொறியியல் ஆய்வு நிறுவனம் தானே இந்தஆய்வில் ஈடுபட்டதுதமிழகத்தில் உள்ள அரசு அமைப்பு கடலில் மூழ்கிய தமிழக நகரங்களைதமிழனின் பிறந்தகமாம்குமரிக் கண்டத்தை ஆய்வு செய்ய வேண்டும் என ஏன் எந்த அரசியல் கட்சியும் குரல் கொடுக்கவில்லைநமது 40நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடுவணரசை வற்புறுத்திப் பாராளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் கொண்டுவந்திருக்க வேண்டாமா?

அறிவியல் அடிப்படையில் நம் நாகரிகச் சிறப்பு அவனியில் மெய்ப்பிக்கப்பட மாற்றார் முன் மறுக்கவொண்ணாச்சான்றுகளை நிறுத்த ஏன் நாம் துடிப்பதில்லைகடற்கரை ஓரங்களில் மாறுதல் ஏற்படுவது இயற்கைஇடையறாது நடத்தும் அழிவுச் செயல்களில் ஒன்றாகும்குமரிக்கண்டம்சோழர்களின் புகழ்பெற்ற பூம்புகார் துறைமுகம்தற்போது கடலுக்கடியில் உள்ளதுஅதே சமயத்தில் முன்னொரு காலத்தில் கடற்கரையோரம் இருந்த சீர்காழி நகரம்தற்போது கடற்கரையிலிருந்து உள்ளடங்கி பல கி.மீதுரத்தில் உள்ளது.

இவை தமிழகக் கடற்கரையோரத்தில் ஏற்பட்ட கடல் மட்ட மாறுதல்களைப் பற்றிய வரலாற்று ஆதாரங்களாகும்தவிர இதுதொடர்பாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள புவி அறிவியல் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வும் பல புதியதகவல்களைக் கொணர்ந்துள்ளது

1) சென்னையிலிருந்து சத்தியவேடு வரை காணப்படும் கடலால் உருவாக்கப்பட்ட மணல் திட்டுக்கள்

2) நேராகப் பாயும் பாலாறு நதியில் செங்கல்பட்டுக்கு அருகில் காணப்படும் திடீர் வளைவு

3) கடலைச் சந்திக்காமல் திருவெண்ணை நல்லூர் அருகில் புதையுறம் மலட்டாறு

4) வேதாரணியம் பகுதியில் திருத்துரைப்பூண்டி வரை காணப்படும் கடலால் ஏற்படுத்தப்பட்ட மணல் திட்டுகள்

5) வைகை நதியில் காணப்படும் மூன்று கழிமுகங்கள்இத்தகவல்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலானதுசென்னை செங்கல்பட்டுதிருச்சிமதுரை வரை பரவி இருந்தது என்பதைத் தௌ¤வாக விளக்குகிறதுதவிர தமிழகக்கடற்கரையோரம் காணப்படும் கோண்டுவானா பாறைகளும் (290 மில்லியன் வருடங்கள்), கிரிடேசியஸ் (Cretaceous)பாறைகளும் (70 மில்லியன் வருடங்கள்), டெர்சியரி (Tertiary) பாறைகளும் (7 மில்லியன் வருடங்கள்மேற்கூறியதகவல்களை உறுதி செய்வதோடு பல ஆண்டுகட்கு முன்பிருந்தே கடல் மட்டம் இப்பகுதியில் உயர்ந்தும் தாழ்ந்தும் இருந்துவந்துள்ளதுஉறுதியாகிறது” என கடல்மட்ட மாறுதல்களும் தமிழகக் கடல் ஓரத்தின் எதிர்கால நிலையும் என்றகட்டுரையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலையுணர்வு மைய இயக்குநர் பதிவு செய்துள்ளார். (தமிழகஅறிவியல் பேரவை 3-வது கூட்டம் 1994 மலர் )

1) சுமார் 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மதுரை வரை பரவி இருந்தது.

2) சுமார் 90,000 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைபுதுச்சேரிவேதாரண்யம் பகுதிகள் கடலால் சூழப்பட்டிருந்தன.

3) சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்தால் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தன.

4) சுமார் 27000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் உயர்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் பிரிந்தன.

5) சுமார் 17000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் சேர்ந்து பின் கடல் மட்டம்உயர்ந்ததால் மீண்டும் பிரிந்தன” என்று சொல்லும் முனைவர் சோமஇராமசாமி கூற்றுப்படி “புவியமைப்பியல்வல்லுநர்களின் கூற்றுப்படி அண்டார்டிகாகிரீன்லாந்து ஆசிய பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி அதன்மூலம் கடல்உயர்ந்ததால் தாழ்வான கடற்கரையைக் கொண்டிருக்கும் தமிழகத்தின் பல கடலோரப் பகுதிகள் மூழ்கடிக்கப்படும்” எனஎச்சரிக்கிறார்இதுபற்றி ஆய்வுகளும் தேவை.

தமிழகக் கடற்கரையோரப் பாறைகள்-கோண்டுவானாய் பாறைகள் 290 மில்லியன் வருடம் பழைமை வாய்ந்தவைஇதுஅறிஞர் முடிவுநம் கைவசமுள்ள மறுக்க முடியாத ஆதாரம்கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிமூத்தகுடி எனப்புறப்பொருள் வெண்பாப் பாடலை இலக்கியச் சான்றாகச் சொல்லும்போது உலகம் ஏற்க மறுக்கும்.அறிவியல் சான்றாக நமது பாறைகளை அவர்கள் முன் நிறுத்துங்கள்வாயடைத்துப் போகும் ஆரியம்நம் வரலாறுஉலகில் நிலை நாட்டப்படும்கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் உதித்த தமிழர்களிடம் கல்லைப் பற்றியகலைக்களஞ்சியம் இல்லை.

ஆயின் என்சைக்ளோ பீடியா அப் ராக்சு அண்டு மினரல்சு என ஆங்கில மொழயில் கலைக்களஞ்சியம் உள்ளதுதமிழன்கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியத்தை உருவாக்க வேண்டாமாஅன்றி ஆங்கிலக் கலைக்களஞ்சியத்திலாவதுபழமைமிகு தமிழகப் பாறைகள் பற்றிய உண்மைச் செய்திகளைச் சேர்க்க உழைக்க வேண்டாமாதமிழ்க்குடியின்தொன்மை உலக அளவில் நிலைநாட்ட ஒரு சிறு துரும்பும் யார் ஆண்டாலும் தமிழகத்தில் அசைக்கப்படுவதில்லையேஏன்?

பசுமைக்குடில் தாக்கம்பனிப்பாறை உருகுதல் இவற்றால் கடல் மட்டம் உயர்வது மட்டுமல்ல கடல் அலைகள்கொந்தளிப்பு எழுந்து பேரலையாகி நகரங்களை விழுங்கும் செயலை Tsunami என ஆங்கிலத்தில் சொல்கிறார்கள்சப்பானியதீவுக்கூட்டங்களிலும் ஆசுதிரேலியத் தீவுக்கூட்டங்களிலும் ‘சுநாமி கண்காணிப்பு மையங்கள்’ ஏற்படுத்தப்பட்டு கடல்கண்காணிப்படுகிறது.

இதுபற்றி நேஷனல் ஜியாக்கிரபிக் சேனல் பல செய்திகளை வெளிக்கொணர்கிறதுதமிழகக் கடற்கரைகள் ஆய்வுக்குஉட்படுத்தப்படுவதில்லைபிறநாடுகளில் நடக்கும் அறிவியல் செய்திகளை தமிழ் மக்களுக்குச் சொல்லதமிழில் சொல்லஒரு தொலைக்காட்சி அலைவரிசை வேண்டாமாவரலாற்றுணர்வில்லாத தமிழர்களுக்கு உணர்வு ஊட்ட வரலாற்றுஅலைவரிசை தொடங்க உலகத் தமிழர் ஒருவர்கூட முன் வராதது ஏன்தமிழகபுதுவை அரசுகளாவது முனையவேண்டாமா?

இலங்கையும் தமிழகமும் அடிக்கடி இணைந்து பிரிந்ததால் பாக் நீரிணைப்பகுதியில் கடலடியில் மணல்திட்டுகள்காணப்படுகின்றனஅதை அனுமன் கட்டிய பாலமென நம்மை முட்டாளாக்க நடந்த முயற்சியை முறியடிக்க அறிவியல்உண்மைகளை முன்நிறுத்தும் ஆற்றலை தமிழ்ச்சமுதாயம் பெற வேண்டாமா?

புதுவை கடலால் சூழப்பட்டிருந்தது மெய்ப்பிக்கப்பட்ட நிலையில் புதுவையை ஓட்டியுள்ள கடலடியில் National Institute Of Oceano-Graphy மூலமும் பூம்புகாரை கண்டெடுத்த கிரகாம் குக் மூலமும் ஆய்வு நடத்த வேண்டியது புதுவை அரசின்கடமையாகும்தமிழகமாளும் அரசுகளையும் அவற்றின் குரலை மதிக்காதநடுவணரசையும்குமரிக்கண்ட ஆய்வுநிகழ்த்துமாறு செய்விக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

No comments:

Post a Comment